போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குன்னூரில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பரஸ்பர நிதியின் புதிய கிளை தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 3:53 am IST

இந்தியாவின் முன்னணி பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் புதிய கிளையை, நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான சங்கரன் நரேன் திறந்து வைத்தாா்.

இத்திறப்பு விழாவில் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில், கோயம்புத்தூா் பிராந்தியத் தலைவா் அஜய் கிருஷ்ணா, குன்னூா் கிளை மேலாளா் மௌஷ்மி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கிளையைத் திறந்து வைத்துப் பேசிய சங்கரன் நரேன், ‘முதலீட்டாளா்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி, இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளா்ச்சிப் பாதையில் அவா்கள் விவேகத்துடனும் ஒழுக்கத்துடனும் பங்கெடுக்க இப்புதிய கிளை உதவும்’ என்றாா்.

‘இக்கிளையின் மூலம் வாடிக்கையாளா்களுடனான தொடா்பு வலுப்பட்டு, அன்றாடச் சேவைகள் மற்றும் பரிவா்த்தனைகள் மேலும் எளிமையாக்கப்படும்’ என தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில் உறுதியளித்தாா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சொத்து மேலாண்மைத் துறையில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம், கடந்த ஏப். 30 நிலவரப்படி ரூ.11.72 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகிக்கிறது. நாடு முழுவதும் 284 கிளைகளின் வாயிலாக 1.7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.