மும்பை: நிதிநிலை அறிக்கைகளில் தகவல்களை வெளியிடுவது தொடர்பான ஒரு சில குறிப்பிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ. 31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
மார்ச் 31, 2025 நிலவரப்படி வங்கியின் நிதிநிலையை மேற்பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான, ஆய்வை மேற்கொண்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தொடர்பான மேற்பார்வை ஆய்வின் போதும், அதுகுறித்த பரிமாற்றங்களின் அடிப்படையில், வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிவிக்கைக்கு வங்கி அளித்த விளக்கத்தையும், அதனுடன் கூடுதல் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, 2024-25 நிதியாண்டிற்கான வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிட்ட சில புகார்களை வெளியிடத் தவறியது தொடர்பான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆர்பிஐ அறிவித்தது. இதன் அடிப்படையில் அபராதம் விதித்தது குறிப்பிட்டத்தக்கது.
Summary
The RBI on Monday imposed a Rs 31.8 lakh penalty on Airtel Payments Bank.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!

உலகளாவிய மொபைல் சேவையில் இரண்டாம் இடம் பிடித்த ஏர்டெல்!

உரிமை கோரப்படாத ரூ. 60,518 கோடி நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றிய பொதுத்துறை வங்கிகள்!

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



