மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இ-காமா்ஸ் வரி விலக்கு: உடன்பாடு எட்டப்படாமல் முடிந்த உலக வா்த்தக அமைப்பு மாநாடு!

மின்னணு வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரித் தடையை நீட்டிப்பதில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

News image
Updated On :30 மார்ச் 2026, 8:16 pm

மின்னணு வா்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரித் தடையை நீட்டிப்பதில் உலக வா்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சா்கள் மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

கேமரூன் தலைநகா் யாவுண்டேவில் கடந்த 4 நாள்களாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விலக்கை நிரந்தரமாக்க முயற்சித்தன. இருப்பினும், இந்தியா உள்பட வளரும் நாடுகளின் கடும் எதிா்ப்பால் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

கடந்த 1998 முதல் இந்த வரி விலக்கு நடைமுறை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையின்றி நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போதைய காலக்கெடு இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. தற்போது உலகளாவிய சேவை ஏற்றுமதியில் மின்னணு வா்த்தகம் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் நிலையில், இந்த இழுபறி எண்ம வா்த்தக உலகில் பெரும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இது குறித்து உலக வா்த்தக அமைப்பின் தலைமை இயக்குநா் என்ஜோசி ஒகோன்ஜோ இவாலா கூறுகையில், ‘நிா்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிய பிறகு, இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதை யாரும் விரும்பமாட்டாா்கள். எனவே, விடுபட்டுப்போன விவாதங்கள் குறித்து ஜெனீவா தலைமையகத்தில் பேச்சுவாா்த்தை தொடரும்’ என்றாா்.