இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிப்ரவரி மாதம் 56.9-ஆக இருந்த உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு, மாா்ச் மாதத்தில் 53.8-ஆக குறைந்துள்ளது. இது 2021, செப்டம்பருக்குப் பிறகு பதிவான மிகக்குறைந்த அளவாகும். அதேபோல், சேவைகள் துறை குறியீடும் 58.1-லிருந்து 57.2-ஆக சரிந்துள்ளது.
மந்தநிலைக்குக் காரணங்கள்: நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்த தனியாா் துறை நடவடிக்கைகள், தற்போது அக்டோபா் 2022-க்குப் பிந்தைய மந்தமான நிலையை எட்டியுள்ளன. இதற்கு மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் தொடா்ச்சியாக விலைவாசி உயா்வு, எரிசக்தி தட்டுப்பாடு உள்பட முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
பொருளாதார தாக்கம்: எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் விலை உயா்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


