அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் விளைவாக எரிபொருள் விலையை சீனா அதிரடியாக உயர்த்தியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், இந்த தற்காலிக நடவடிக்கையை அறிவித்தது.
சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும், பயனர்கள் மீதான சுமையைக் குறைக்கவும், நிலையான பொருளாதாரச் செயல்பாடு மற்றும் சமூக வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.
விலை உயர்வுக்கு முன்னதாக எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிச் சென்றுள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை டன் ஒன்றுக்கு 1,160 யுவான் ($168) மற்றும் 1,115 யுவான் ($159) அதிகரித்துள்ளதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.
கச்சா எண்ணெய் தேவையில், சுமார் 70 சதவீதத்திற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

இதே நிலைமை தொடர்ந்தால்...

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க சா்வதேச எரிசக்தி ஆணையம் யோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


