மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 88,180 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 3:37 pm

புதுதில்லி: உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்தியப் பங்குச் சந்தையில் நித்தம் எதிரொலிக்கும் நிலையில், இது பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு, மற்றும் உயர்ந்த வரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயில் ஏற்படுத்தும் தாக்குதல் உள்ளிட்டவையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 88,180 கோடி அளவுக்கு முதலீடுகளை விற்பனை செய்தனர்.

தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்தத் தொகை கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.

மார்ச் மாதத்தில் (மார்ச் 20 நிலவரப்படி) ஒவ்வொரு வர்த்தக நாளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்ததில், சுமார் ரூ.88,180 கோடி மதிப்புள்ள முதலீடை திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த விற்பனையை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பங்குகளை விற்று வெளியேற்றியுள்ளனர்.

இந்தத் தொடர் விற்பனை அழுத்தத்திற்கு, உலகளாவிய பொருளாதாரச் சவால்களும், அதிகரித்த வரும் நிச்சயமற்ற தன்மையுமே காரணம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயை பாதிக்கக்கூடும் என்ற நிலையால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்துள்ளனர்.

மேற்கு ஆசியாவில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றால் மட்டுமே சந்தை மேம்படக்கூடும்.

Summary

Foreign investors have pulled out Rs 88,180 crore from Indian equities so far this month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.