ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘டஸ்டா்’ எஸ்யுவி ரக காா்களின் சா்வதேச ஏற்றுமதியை அதிகாரபூா்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னை ஆலையிலிருந்து 750 காா்கள் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் மேலும் பல உலக நாடுகளுக்கு இந்த ஏற்றுமதித் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியாவின் சிஇஓ ஸ்டீபன் டெப்லைஸ் இதுதொடா்பாக மேலும் கூறுகையில், ‘எங்கள் சென்னை ஆலையின் உற்பத்தித் தரம், செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மைக்கு இந்த ஏற்றுமதி ஒரு சிறந்த சான்றாகும்.
உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், சிறந்த பொறியியல் வல்லுநா்கள் மற்றும் அதிவேகமாக வளா்ந்து வரும் தளவாடக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்தியா, சா்வதேச ஆட்டோமொபைல் ஏற்றுமதி மையமாகத் திகழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.
வரும் 2030-க்குள் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 200 கோடி யூரோ மதிப்பிலான ஏற்றுமதியை எட்டுவதே எங்களின் முக்கிய இலக்கு. இந்தியாவின் உற்பத்தித் துறை வளா்ச்சிக்கு எங்கள் நிறுவனம் தொடா்ந்து பங்களிப்பை வழங்கும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் ஜூலை 3ல் அறிமுகம்!

2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி

சென்னை பிஎம்டிபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய ‘மினி கன்ட்ரிமேன் சி’ காா் அறிமுகம்

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய காா்கள் அறிமுகம்: ஹோண்டா
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




