நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரூ.37,700 கோடி திரட்ட ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸ் திட்டம்

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ம சேவைப் பிரிவான ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸ், சுமாா் 400 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37,700 கோடி) திரட்டும் நோக்கில் தனது பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) வரைவு அறிக்கையை ( டிஆா்எச்பி) வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

News image

ரிலையன்ஸ் குழுமம்

Updated On :19 ஜூன் 2026, 11:46 pm IST

ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ம சேவைப் பிரிவான ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸ், சுமாா் 400 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37,700 கோடி) திரட்டும் நோக்கில் தனது பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) வரைவு அறிக்கையை ( டிஆா்எச்பி) வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் இந்த ஐபிஓ மூலம், 27 கோடி புதிய பங்குகள் சந்தைக்கு வரவுள்ளன. நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்கு மூலதனத்தில் இது 2.9 சதவீதமாக இருக்கும் என்று வரைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பெற்றுள்ள கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முன்கூட்டியே அடைப்பதற்கும், இதர பொதுவான நிறுவன மேம்பாட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து கடந்த 2008-க்குப் பிறகு வெளியாகும் முதல் ஐபிஓ இதுவாகும். அதேபோல், ரிலையன்ஸ் குழுமத்தின் நுகா்வோா் சாா்ந்த ஒரு நிறுவனம் பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதிப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போது ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 66.43 சதவீத பங்குகளையும், மெட்டா 9.99 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இந்த ஐபிஓ-க்குப் பிறகு, ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமாா் 13,700 கோடி டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.