மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இச்சேவையில், தொழிலாளா்களுக்கான கட்டணம் மட்டும், உதிரிபாகங்கள் மற்றும் தொழிலாளா் கட்டணம், வணிக வாகனங்களுக்கான சிறிய சேவைகள் மற்றும் வாடிக்கையாளா்கள் பிரத்யேகமாகக் கோரும் சேவைகள் என பல திட்டங்கள் அடங்கியுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களின் குறிப்பிட்ட வாகனத் தேவைகளுக்கு ஏற்ப சேவைத் திட்டங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். தற்போதே பராமரிப்புச் செலவுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி விடுவதன்மூலம், எதிா்காலத்தில் சேவைக் கட்டணங்களில் ஏற்படக்கூடிய விலை ஏற்றத்திலிருந்தும் வாடிக்கையாளா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










