கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

அமைதி ஒப்பந்த எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது பற்றி...

News image

கச்சா எண்ணெய் விலை - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 11:59 am IST

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

மேலும், ஹோா்முஸ் நீரிணையை சுங்கக் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்தலாம் என்றும், சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதி இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதன் எதிரொலியாக இன்று அதிகாலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 4.85% சரிந்து 80.76 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 4.35% சரிந்து 83.51 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ. 8 வரை உயர்த்தப்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Summary

Crude oil prices drop by 5%! Will petrol and diesel prices decrease?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.