திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு..

News image

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு - கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 2:00 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.

மேற்கு ஆசிய போா் பதற்றம், கச்சா எண்ணொய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஜூன் 1-இல் பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும், ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையானது. தொடா்ந்து, ஜூன் 4-இல் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும், ஜூன் 5-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.