
ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!
ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது உணவு டெலிவரி சேவையில் களமிறங்க உள்ளது பற்றி...

ஃப்ளிப்கார்ட் - பிரதிப்படம்
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இணையவழிப் பொருள் விற்பனை (இ-காமர்ஸ்) நிறுவனமாக ஃப்ளிப்கார்ட் விளங்குகிறது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முடியும்.
இ-காமர்ஸ் (E-commerce) மட்டுமல்லாது ஆர்டர் செய்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் பொருள்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்யும் குயிக் காமர்ஸிலும் (Quick Commerce) ஃப்ளிப்கார்ட் மினியூட்ஸ் என்ற பெயரில் தனது விரைவு சேவயை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், வரும் சில வாரங்களில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக பெங்களூரு நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இதன்மூலம் பெறப்படும் வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களைப் பொறுத்து, அடுத்தடுத்த முக்கிய நகரங்களில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேவையை ஃப்ளிப்கார்ட் செயலியிலும் இதற்கென அறிமுகப்ப்டுத்த உள்ள உணவு டெலிவரி செயலியிலும் பெற முடியும். ஏற்கெனவே ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ள நிலையில் ஃப்ளிப்கார்ட்டின் இந்த அறிவிப்பு உணவு டெலிவரி சேவையில் உள்ள போட்டியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Flipkart is set to launch its food delivery service soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





