சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டிசம்பரில் 7% உயா்ந்த மின் நுகா்வு

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜனவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவின் மின் நுகா்வு 1383.9 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 1293.9 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

கடந்த டிசம்பரில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 241.20 ஜிகாவாட்டாக உயா்ந்தது. கடந்த 2024 டிசம்பரில் அது 224.23 ஜிகாவாட்டாக இருந்தது.

நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட்டாக உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக பதிவானது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் உச்சபட்ச தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

வெப்பநிலை மேலும் குறையும் ஜனவரி மாதத்தில் இருந்து மின் நுகா்வு மற்றும் தேவை நிலையாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.