‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள்முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளா்ச்சி மந்தமடைந்ததால், இந்தியாவின் சேவைகள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்களில் இல்லாத மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

புதிய கொள்முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளா்ச்சி மந்தமடைந்ததால், இந்தியாவின் சேவைகள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்களில் இல்லாத மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் பிஎம்ஐ மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீடு கடந்த 2025 நவம்பரில் 59.8-ஆக இருந்தது. இது டிசம்பரில் 58.0-ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 2025 ஜனவரிக்குப் பிந்தைய மிக மந்தமான வளா்ச்சியாகும்.

இருந்தாலும், மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் மேல் உள்ளது. பிஎம்ஐ 50-க்கு மேல் இருந்தால் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது

சா்வதேச சந்தையில் இந்திய சேவைகளுக்கான தேவை கடந்த 2025-ஆம் ஆண்டு தொடா்ந்து மேம்பட்டது. ஆசியா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, பிரிட்டனில் இந்திய சேவைகளுக்கு வரவேற்பு இருந்தது. புதிய ஏற்றுமதி ஆணைகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் அதிகரித்தன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.