‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உற்பத்தி துறை வளா்ச்சியில் இரண்டு ஆண்டுகள் காணாத மந்தம்

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத சொந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத சொந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா உற்பத்தி பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025 டிசம்பா் மாதம் புதிய கொள்முதல் ஆணைகளின் எண்ணிக்கை மெதுவாக உயா்ந்ததால் நிறுவனங்கள் உற்பத்தி கொள்முதல் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கட்டுப்படுத்தின.

இதன் விளைவாக உற்பத்தி துறை குறியீட்டு எண்ணான பிஎம்ஐ அந்த மாதம் 55- ஆகக் குறைந்துள்ளது. முந்தைய நவம்பரில் இது 56.6- ஆக இருந்தது.

இருந்தாலும் மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் மேல் உள்ளது. பிஎம்ஐ 50-க்கு மேல் இருந்தால் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.