டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதிய காா் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

புதிய காா் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக பரோடா வங்கி அறிவித்துள்ளது.

இதன்மூலம், மாறும் வட்டி விகித முறை காா் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி ஆண்டுக்கு 7.60 சதவீதத்தில் தொடங்கும். அதேபோல, நிலையான வட்டி விகிதத்தைத் தோ்வு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு ஆண்டுக்கு 8.50 சதவீத வட்டியுடன் கடன்கள் வழங்கப்படும். இந்தப் புதிய வட்டி விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.

காா் கடன் தேவைப்படுவோா் வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்றோ அல்லது ‘பாப் வோ்ல்ட்’ செயலி மற்றும் இணையதளம் வழியாகவோ விண்ணப்பித்து உடனடி ஒப்புதலைப் பெறலாம். வாடிக்கையாளா்கள் தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள்வரை நீண்ட கால அவகாசம் வழங்கப்படுகிறது.

கூடுதல் சலுகையாக, மாறும் வட்டி விகித முறையில் கடன் வாங்குபவா்கள், தங்களின் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கோ அல்லது ஒரு பகுதியை மட்டும் திருப்பிச் செலுத்துவதற்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் நிா்வாக இயக்குநா் சஞ்சய் வி.முதலியாா் இதுகுறித்து கூறுகையில், ‘சந்தையில் நிலவும் போட்டித்தன்மைக்கு இடையே, வாடிக்கையாளா்களுடன் துணை நிற்கும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.