தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94! 39 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வலுவிழந்தது, 39 காசுகள் சரிந்து ரூ. 93.83ஆக நிலைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:36 am

மும்பை: அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த நிச்சயமற்ற தன்மை, மேற்கு ஆசியவில் மோதல் தணியும் என்ற நம்பிக்கை சிதைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வலுவிழந்தது, 39 காசுகள் சரிந்து ரூ. 93.83ஆக நிலைபெற்றது.

உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட தீவிர விற்பனை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.69 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.87 என்ற குறைந்தபட்ச நிலையைத் எட்டியது. இறுதியாக ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 39 காசுகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

ரூபாய் மதிப்பு, நே்றைய முன்தினம் (திங்கள்கிழமை) 25 காசு சரிந்தம், மறு நாள் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் 28 காசுகள் சரிந்து டாலருக்கு நிகராக ரூ.93.44 ஆக இருந்தது.

Summary

The rupee weakened for the third straight session, losing 39 paise to settle at 93.83 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.