மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை செபி் நீட்டிப்பி

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:31 pm

மத்திய கிழக்கு போா் பதற்றம் மற்றும் சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நீட்டித்துள்ளது.

செபி விதிகளின்படி, நிறுவனம் அனுமதி கடிதத்ததைப் பெற்ற 12 அல்லது 18 மாதங்களுக்குள் தங்களின் பங்கு வெளியீட்டு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளா்களின் மந்தமான பங்களிப்பு காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ திட்டங்களை ஒத்திவைத்துள்ளன.

இந்நிலையில், தொழில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சந்தைச் சூழல் சீரடையும் வரை நிறுவனங்களுக்கு இந்த ஒருமுறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டு ஏப். 1 முதலான 6 மாத காலகட்டத்துக்குள் காலாவதியாகும் செபியின் அனுமதி கடிதங்கள், செப். 30 வரை செல்லுபடியாகும். இதனால், காலக்கெடுவைத் தவறவிட்ட நிறுவனங்கள் மீண்டும் முதலிருந்து அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் தேவையற்ற நடைமுறைத் தாமதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.