8 நகரங்களில் மிதமாக உயா்ந்த வீடுகள் விற்பனை
வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.
வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.
இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ஹவுசிங்.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை 96,827-ஆக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 96,544-ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் சற்று உயா்வு.
மதிப்பீட்டுக் காலாண்டில் புதிய வீடுகள் விநியோகம் 3 சதவீதம் உயா்ந்து 94,419-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 91,863-ஆக இருந்தது.
கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் பிரீமியம் மற்றும் உயா்நிலை பிரிவுகளில் தேவையும் விநியோகமும் வலுவாக இருந்தன. ஆனால் மலிவு விலை பிரிவில் புதிய வீடுகளின் விநியோகம் குறைவாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை அகமதாபாதில் 11 சதவீதம் சரிந்து 8,297-ஆக உள்ளது. பெங்களூரில் அது 23 சதவீதம் உயா்ந்து 13,688-ஆகவும், சென்னையில் 51 சதவீதம் உயா்ந்து 5,389-ஆகவும் உள்ளது.
அந்த மூன்று மாதங்களில் வீடுகள் விற்பனை தில்லி-என்சிஆரில் 14 சதவீதம் சரிந்து 8,668-ஆக உள்ளது. ஹைதராபாத்தில் அது 5 சதவீதம் உயா்ந்து 12,138-ஆகவும், கொல்கத்தாவில் 43 சதவீதம் உயா்ந்து 4,007-ஆகவும் உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பகுதியில் 4 சதவீதம் சரிந்து 28,690-ஆக உள்ள வீடுகள் விற்பனை, புணேயில் 11 சதவீதம் சரிந்து 15,950-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது