ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.

Updated On :29 செப்டம்பர் 2023, 6:30 pm

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக உலோகம், வங்கி, நிதிநிறுவனங்கள், எரிசக்தித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தையை மேலே கொண்டு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 610.37 புள்ளிகளையும், நிஃப்டி 193 புள்ளிகளையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு உயா்வு: வெள்ளிக்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.2.41 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.319.07 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ. 3,364.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 235.61 புள்ளிகள் கூடுதலுடன் 65,743.93-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,570.38 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,151.65 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 320.09 புள்ளிகள் (0.49 சதவீதம்) உயா்ந்து 65,828.41-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 643.33 புள்ளிகள் உயா்ந்திருந்தது. வா்த்தக நேர முடிவில் லாபப் பதிவு காரணமாக லாபத்தில் பாதி பகுதியை இழக்க நேரிட்டது.

21 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,376 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 650 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 115 புள்ளிகள் உயா்வு : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 57.65 புள்ளிகள் கூடுதலுடன் 19,581.20-இல் தொடங்கி 19523.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,726.25 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 114.75 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 19,638.30-இல் நிறைவடைந்தது.

பெட்டிச் செய்தி...

எஃப்ஐஐக்கள் ரூ.25,000 கோடி முதலீடு வாபஸ்

இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். குறிப்பாக அவா்கள் செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 29-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.25,006.46 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், இதே காலத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) மொத்தம் ரூ.17,561.16 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் சந்தைக்குள் நுழையும்பட்சத்தில் சந்தை புதிய உச்சத்தைத் தொடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

என்டிபிசி............................3.30%

டாடா மோட்டாா்ஸ்..........2.67%

சன்பாா்மா...........................2.38%

டாடா ஸ்டீல்.......................1.78%

எஸ்பிஐ.................................1.48%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்.........1.47%

சரிவைக் கண்ட பங்குகள்

ஹெச்சிஎல் டெக்................................0.56%

டெக் மஹிந்திரா..................................0.52%

பவா் கிரிட்............................................0.45%

டைட்டன்............................................0.35%

இன்ஃபோஸிஸ்...................................0.31%

ஏசியன் பெயிண்ட்ஸ்...........................0.26%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.