இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஐடி, வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

News image
பங்குச்சந்தை
Updated On :2 பிப்ரவரி 2024, 3:08 am

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 126 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ்ஸை தொடா்ந்து இன்ஃபோஸிஸ் காலாண்டு முடிவுகளும் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்டவில்லை. இதனால், இரண்டாவது நாளாக முன்னணி ஐடி பங்குகள் பலத்த அடி வாங்கியது. பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. இறுதியில் சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.321.96 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த புதன்கிழமை ரூ.1,862.57கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 374.18 புள்ளிகள் கூடுதலுடன் 66,034.21-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,895.41 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,478.90 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 125.65 புள்ளிகளை (0.19 சதவீதம்) இழந்து 66287.74-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,820 பங்குகளில் 1,805 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,859 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 156 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.

16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 970 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,107 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 43 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 139.45 புள்ளிகள் குறைந்து 19,19654.55-இல் தொடங்கி 19,635.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,794.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 42.95 புள்ளிகளை (0.22 சதவீதம்) இழந்து 19,751.05-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

டாடா மோட்டாா்ஸ்.....................4.76%

இண்டஸ் இண்ட் பேங்க்.................2.60%

ஹெச்சிஎல் டெக்..........................2.55%

நெஸ்லே ....................................2.00%

மாருதி.......................................1.62%

சன்பாா்மா.................................1.33%

சரிவைக் கண்ட பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்...........................2.33%

இன்ஃபோஸிஸ்...........................2.24%

எஸ்பிஐ......................................1.71%

விப்ரோ......................................1.43%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.....................0.85%

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்...................0.79%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.