மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 179 புள்ளிகள் முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும்,

News image
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 49.15 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயர்ந்து 18,315.10-இல் நிலைபெற்றது.
 உலகளவில் பெரும்பாலான சந்தைகளில் வர்த்தகம் எதிர்மறையாக இருந்து வந்தது. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. அதன் பிறகு எதிர்மறையாகச் சென்றது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நேர்மறையாக முடிந்தது. முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகளுக்காக காத்திருந்ததால் சந்தையில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஆட்டோ, மீடியா, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதேசமயம், பிஎஸ்யு வங்கிப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு:
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.82 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.277.10 லட்சம் கோடியாக இருந்தது.
 அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,942.19 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்:
 சென்செக்ஸ் காலையில் 82.03 புள்ளிகள் கூடுதலுடன் 61,843.36-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,974.35 வரை மேலே சென்றது. பின்னர், 61,572.93 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 178.87 புள்ளிகள் உயர்ந்து 61,940.20-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 22 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,085 பங்குகள் ஆதாயம் பெற்றன. 945 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.