2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இரண்டாவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் புதிய சாதனை

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து,

News image
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி
 40 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் முந்தைய சாதனை அளவான 63,583.07-ஐ முறியடித்து 63,588.31 வரை உயர்ந்து புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் ஏறுமுகம் பெற்றது. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தை வலுப்பெற உதவியாக இருந்தன. மேலும், ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் உற்சாகம் பெற்றது. இது முதலீட்டாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. நிதிநிறுவனங்கள், பிஎஸ்யு பேங்க், மீடியா, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதே சமயம், மெட்டல், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
 சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.294.37 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,942.62 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 139.76 புள்ளிகள் கூடுதலுடன் 63,467.46-இல் தொடங்கி அதிகபட்சமாக 63,315.62 வரை உயர்ந்து 52 வார புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னர், 63,315.62 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 195.45 புள்ளிகள் உயர்ந்து 63,523.15-இல் முடிவடைந்தது.
 17 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 950 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,
 1,100 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள்
 ஆதாயப் பட்டியலிலும்,
 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 பவர்கிரிட் 3.68%
 ஹெச்டிஎஃப்சி வங்கி 1.70%
 ஹெச்டிஎஃப்சி 1.66%
 டெக் மஹிந்திரா 1.33%
 டிசிஎஸ் 0.93%
 விப்ரோ 0.78%
 சரிவைக் கண்ட பங்குகள்
 எம் அண்ட் எம் 1.59%
 ஐடிசி 1.29%
 ஆக்ஸிஸ் வங்கி 0.88%
 இண்ட்ஸ்இண்ட் வங்கி 0.87%
 பஜாஜ் ஃபைனான்ஸ் 0.62%
 மாருதி 0.62%
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.