நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் 844 புள்ளிகள் வீழ்ச்சி- சந்தை மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு

பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எதிர்மறையாக முடிவடைந்தது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:56 am

தினமணி

பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 257.45 புள்ளிகள் (1.49 சதவீதம்) குறைந்து 16,983.55-இல் முடிவடைந்தது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. உள்நாட்டுச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனர். புவிசார் அரசியல் தாக்கமும் அதிகரித்து வருகிறது. மேலும், உலகப் பொருளாதார சரிவு பற்றிய கவலைகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி தொடங்கினாலும், நேரம் செல்ல பங்குகள் விற்பனை அதிகரித்தன. இதனால், மூன்றாவது நாளாக கடும் சரிவுடன் முடிவடைந்தது.
 844 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 13.14 புள்ளிகள் கூடுதலுடன் 58,004.25-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,027.52 வரை மேலே சென்றது. பின்னர், 57,050.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 843.79 புள்ளிகள் (1.46 சதவீதம்) குறைந்து 57,147.32-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 977.12 புள்ளிகளை இழந்திருந்தது.
 28 பங்குகள் விலை சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட் தவிர மற்ற 28 பங்குகளும் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 3.79 சதவீதம், நெஸ்லே 3.34 சதவீதம் குறைந்து அதிகம் நஷ்டத்தை எதிர்கொண்டன. இவற்றுக்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹேந்திரா, டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸýகி, டைட்டன், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி குறைந்து குறைந்து வர்த்தக முடிவில் ரூ.270.11 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்களன்று ரூ. 2,139.02 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.