இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (ஸிட்பி) மற்றும் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை 59 நிமிடங்களில் கடனுதவி வழங்குவதற்கான முதல் கட்ட அனுமதியை வழங்குகின்றன.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜ்ஜ்ஜ்.ல்ள்க்ஷப்ர்ஹய்ள்ண்ய்59ம்ண்ய்ன்ற்ங்ள்.ஸ்ரீர்ம் வலைதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து, உள்ளீட்டு முகவரி மற்றும் ரகசிய குறியீட்டைப் பெற வேண்டும். பிறகு அதன் மூலம் அந்த வலைதளத்தில் கடனுதவிக்காக கோரப்படும் ஆவணங்கள், தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் ஆவணங்களும், தகவல்களும் உரிய முறையில் இருந்தால், 59 நிமிடங்களில் கடனுதவிக்கான முதல் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. முதல் கட்ட அனுமதி வழங்கிய பிறகு 7 முதல் 8 நாள்களுக்குள் விண்ணப்பதாரருக்கு கடன் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.