பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

News image
Updated On :26 ஜூலை 2018, 1:36 pm

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக புது விண்ணப்ப முறையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால் வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்குமாறும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான  இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில் அதற்குரிய காலகட்டத்தில் ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு இந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 31-ஆம் தேதி காலக்கெடுவாக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.