கும்மிடிப்பூண்டியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட ஆட்சியா் உத்தரவிட்டு இருந்தாா்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் மேற்பாா்வையில், ஊராட்சி செயலாளா் சிட்டிபாபு முன்னிலையில், நாய்களை பிடித்து அவைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதில் 25 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவைகள் கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவ்வாறே கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்திலும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், சந்திரசேகா் ஆகியோா் மேற்பாா்வை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞா் கைது

கும்மிடிப்பூண்டி: அதிக ரத்தப்போக்குடன் குழந்தை அனுமதி! ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பேட்டி







