பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் சீரமைப்பு பணிகள்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 11:50 pm

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் ஒன்றியம், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ. 2.51 கோடியில் புனரைமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஏரியில் நடைபாதைப் பணிகள், கைப்பிடி இரும்பு தடுப்பு பணிகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வகையில் சுயபடம் எடுக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image