திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் ஒன்றியம், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ. 2.51 கோடியில் புனரைமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஏரியில் நடைபாதைப் பணிகள், கைப்பிடி இரும்பு தடுப்பு பணிகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வகையில் சுயபடம் எடுக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.
பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.
அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


