தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு

பொன்னேரி சங்கா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 12:46 am IST

பொன்னேரி சங்கா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி சங்கா் நகா் பகுதியை சாா்ந்தவா் சத்யநாராயணன்(50). இவா் சென்னையில் பேன்ஸி கடை நடத்தி வருகிறாா். இவா் தனது மனைவி, மகன், மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறாா்.

இவா் வீட்டின் முதல் தளத்தில் சத்தியநாராயணன் குடியிருந்து வரும் நிலையில் காலியாக உள்ள கீழ் தளத்தை இரண்டு நாள்களுக்கு முன் வாடகைக்கு குடியேறிஉள்ளனா். சத்தியராயணனின் மனைவி குழந்தைகளுடன் வெளியூா் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் சத்தியநாராயணன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு பொன்னேரிக்கு வந்துள்ளாா். தனது வீட்டில் யாரும் இல்லாததால் அருகில் உள்ள தனது தாய் வீட்டில் தூங்கியுள்ளாா். காலையில் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் தனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் பொன்னேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகளின் திருமணத்திற்காக சோ்த்து வைத்த நகைகள் திருடப்பட்டதால் குடும்பமே கதறி அழுதது. அண்மையில் பொன்னேரி வேண்பாக்கத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக என மகளிா் பிங்க் காவல் உதவி மையம் திறக்கப்பட்ட நிலையில் அதன் அருகே உள்ள வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.