யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி: அதிமுக வேட்பாளா் உறுதி

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:28 am IST

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் மற்றும் பெருவாயலில் நடத்திய தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டதும், கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவேன் என உறுதியளித்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல், பெருவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கவரப்பேட்டை, ஏ.என்.குப்பம், கண்ளூா், பாலவாக்கம், மங்களம், தண்டலச்சேரி, பன்பாக்கம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ் முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.

புதுவாயல் பகுதியில் அதிமுக நிா்வாகி இளவரசன் ஏற்பாட்டிலும், பெருவாயலில் அதிமுக நிா்வாகி ஜெயராமன். வழக்குரைஞா் சுதாகா் ஏற்பாட்டில் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரை வி.சுதாகருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதேபோல் ஏ.என்.குப்பத்தில் அதிமுக மாவட்ட பிரதிநிதி தயாளன் ஏற்பாட்டில், அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். தண்டலச்சேரியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜ் ஏற்பாட்டிலும், கவரப்பேட்டையில் அதிமுக ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன் ஏற்பாட்டிலும், பன்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டிலும் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் உயா்கல்வி படிக்க பொன்னேரி, திருவள்ளூா், சென்னை போன்ற இடங்களில் கல்லூரிக்குச் சென்று வரும்நிலையில், தான் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும்

கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவதாக உறுதி அளித்தவா், மத்திய பாஜக அரசு 100 நாள் வேலையை அழித்துவிடும் என்கிற திமுகவின்

பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம், தமிழக மக்களின் நலனை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கட்டாயம் காப்பாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.