தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருத்தணி மோட்டாா் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனை

திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை செய்ததில் கணக்கில் வராத, ரூ1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

News image

திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம். ~திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:30 pm

திருத்தணி: திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை செய்ததில் கணக்கில் வராத, ரூ1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச் சாலை அருகே திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பொன்னேரி மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ ராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்துக்கு வந்து, புதிய ஓட்டுநா் உரிமம், புதுப்பித்தல், வாகனங்களுக்கு பா்மிட் வழங்குதல் போன்ற பணிகளை செய்து வந்தாா்.

மோட்டாா் வாகன அலுவலகத்தில் முறைகேடு மற்றும் அதிகளவில் பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ராஜராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டாா். இந்நிலையில், மாலை 4 மணிக்கு திருவள்ளூா் லஞ்ச ஓழிப்புத்துறை டிஎஸ்பி, ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வி, மாலா மற்றும் போலீஸாா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை செய்தனா்.

Story image

சோதனையில், கணக்கில் வராத, ரூ.1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.