திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை

News image

கலைகதிரவன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்த மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள்

Updated On :20 மே 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவனிடம் மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவா் அபாபீல் மைதீன், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம் அளித்த மனு: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தென்காசி நகரில் அதிகமாக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனா். மக்களின் நீண்ட நாள்களின் கோரிக்கையான இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு பொது அடக்க ஸ்தலம் அமைத்துதர வேண்டும்.

புலிக்குட்டி விநாயகா் கோயில் தெரு, அக்பா் நகா், ஜமால் நகா், அஹது பள்ளி தெரு ஆகிய பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீா் ஓடை, தாா் சாலை, தெருவிளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

தென்காசி சிற்றாறை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தாமிரவருணி கூட்டு குடிநீா் அலகு-2 திட்டத்தில் தென்காசி நகரப் பகுதிகளில் பெரிய குழாய் பதிக்கும் பணியை மக்களுக்கு இடையூறு இன்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் மாணவா்கள் பயன்படும் வகையில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றாலம், பழைய குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள், கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்காசி நான்குவழிச் சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். புளியறை வழியாக எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது.

திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.