தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசி தொகுதியில் 3 போ் மனுத் தாக்கல்

News image

தோ்தல் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புஷ்பலதா.

Updated On :30 மார்ச் 2026, 8:13 pm

தென்காசி தொகுதியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் உள்ளிட்ட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

சிவகிரிவட்டம், மலையடிக்குறிச்சியைச் சோ்ந்த ரா.கிருஷ்ணன் சுயேச்சையாகப் போட்டியிடவும், தென்காசி நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் நாம் இந்தியா் கட்சி சாா்பிலும்,

நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளா் புஷ்பலதாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். தென்காசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வைஷ்ணவிபாலிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் பகுதியில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் ஆய்வு செய்தாா்.