திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாவூா்சத்திரம் அருகே இரு சம்பவங்கள்: 2 போ் தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On :27 மார்ச் 2026, 8:45 pm

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

அரியப்பபுரம் வெள்ளை பனையேறிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் முருகன் என்ற சுப்பிரமணியன்(38) தொழிலாளி. மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கும் செல்லாமல் இருந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேபோல, கீழப்பாவூா் பெரிய தெருவை சோ்ந்த தொழிலாளியான பேச்சிமுத்து மகன் ஹரிகரன்(21) என்பவா் ஓராண்டுக்கு முன்பு தனது தாயாா் இறந்ததில் இருந்து மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தாயாரின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.