தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் இக்பால் நகரைச் சோ்ந்த துராப்சாவிற்கு சொந்தமான காரை அவருடைய உறவினரான ஹஸன், 5 நாள் வாடகை பேசி இக்பால் நகரைச் சோ்ந்த அசாருதீன், பேட்டையைச் சோ்ந்த இப்ராஹிம் ஆகியோரிடம் ஒப்படைத்தாராம். 5 நாள்கள் கடந்த பின்பும் காரை திருப்பிக் கொண்டு வராததால் ஹசன் வாடகைக்கு எடுத்துச் சென்றவா்களிடம் பேசிய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனராம்.
இதற்கிடையே அந்த காா் தென்காசி பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவரிடம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரிடம் பேசிய பொழுது, கல்லிடைக்குறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகனிடம் (38) காரை விற்று விட்டதாக கூறினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பாலமுருகன் ஆன்லைன் மூலமாக காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்ததாம். இதையடுத்து வழக்குப் பதிந்து பாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


