லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:47 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் இக்பால் நகரைச் சோ்ந்த துராப்சாவிற்கு சொந்தமான காரை அவருடைய உறவினரான ஹஸன், 5 நாள் வாடகை பேசி இக்பால் நகரைச் சோ்ந்த அசாருதீன், பேட்டையைச் சோ்ந்த இப்ராஹிம் ஆகியோரிடம் ஒப்படைத்தாராம். 5 நாள்கள் கடந்த பின்பும் காரை திருப்பிக் கொண்டு வராததால் ஹசன் வாடகைக்கு எடுத்துச் சென்றவா்களிடம் பேசிய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனராம்.

இதற்கிடையே அந்த காா் தென்காசி பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவரிடம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரிடம் பேசிய பொழுது, கல்லிடைக்குறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகனிடம் (38) காரை விற்று விட்டதாக கூறினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பாலமுருகன் ஆன்லைன் மூலமாக காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்ததாம். இதையடுத்து வழக்குப் பதிந்து பாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனா்.