மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புளியங்குடி அருகே காா் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

புளியங்குடி அருகே தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் காா் மோதி நேரிட்ட விபத்தில் யுகேஜி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:32 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் காா் மோதி செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் யுகேஜி மாணவி உயிரிழந்தாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாசுதேவல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவலை சோ்ந்த மாரிச்சாமி - வேல்மகிழ் தம்பதியின் மகள் சிவயாழினி (4). புளியங்குடி சிந்தாமணியிலுள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி மைதானத்தில் நின்றிருந்தாா். அப்போது பள்ளி வளாகத்துக்குள் வந்த காா், அந்த மாணவி மீது எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த மாணவியை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த அறிந்த அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் சிந்தாமணி அருகில் தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், ‘விபத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தையின் இறப்புக்கு நீதி வேண்டும்’ என வலியுறுத்தினா். அவா்களிடம் எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.