தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தக்கூடாதென எம்எல்ஏ கோரிக்கை

News image
Updated On :5 மார்ச் 2026, 7:49 pm

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலரிடம் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்கள், அதனை சுற்றியுள்ள நிலங்கள் பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகளின் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன .

தற்போது நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறை வசம் இருந்து வரும் நூற்றுக்கணக்கான குளங்களை ‘ஈர நிலம்’ எனக் குறிப்பிட்டு அவற்றை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இதனால் பல வருடங்களாக குளத்தின் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.