தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி, சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் சந்தனமாரி மகன் மாரிராஜ் (30). கீழப்பாவூா், செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மகாராஜா (35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனா்.
இவா்கள் இருசக்கர வாகனத்தில் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் பாவூா்சத்திரம் அடுத்துள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருநெல்வேலியிலிருந்து தென்காசி நோக்கி வந்த காா் மோதியதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
மாரிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மகாராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுமை ஆட்டோ மீது காா், ஆம்னி பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பள்ளி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



