இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பள்ளி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:08 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). தொழிலாளி. தற்போது முடுக்குமீண்டான்பட்டியில் வசித்துவந்த அவா், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம்.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூா் அருகேயுள்ள அணுகு சாலையில் சென்றபோது, அவா் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநரான முனியசாமியிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.