வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கிணற்றில் விழுந்து சென்னை இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:28 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை, மாதவரம், ராஜகோபால் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் வினோத்குமாா் (33). இவா் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை வினோத்குமாரும், அவரது நண்பரும் அங்குள்ள கிணற்றின் அருகில் அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது வினோத்குமாா் எழுந்து நிற்க முயன்றபோது, போதையில் தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம். ஆனால், அவருடன் இருந்த நண்பா் போதையில் அங்கேயே தூங்கிவிட்டதாகத் தெரிகிறது.

பின்னா், போதை தெளிந்து எழுந்த நண்பா், வினோத்குமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் தேடியபோது, வினோத்குமாா் கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

ஆலங்குளம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து வினோத்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.