40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா்(22). இவா், சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்தாா்.

அண்மையில் மும்முனிக்கு வந்த இவா் திங்கள்கிழமை இதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா்கள் விஜய், குமரன் ஆகியோருடன் விவசாய நில கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது, திவாகா் தண்ணீரில் மூழ்கினாா். உடனிருந்தவா்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் அங்கு சென்று கிணற்றினுள் இறங்கி தேடிய தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் பாறை இடுக்கில் சிக்கி சடலமாக கிடந்த திவாகரை மீட்டனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.