ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி அருகே உள்ள மருதநாச்சியாா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் கண்ணன் (26). தொழிலாளி.

இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் முத்துவும் (22) வியாழக்கிழமை நள்ளிரவு கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, இருக்கன்குடியிலிருந்து வாசுதேவநல்லூா் நோக்கிச் சென்ற வேன், இவா்களின் வாகனம் மீது மோதியது.

இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்து அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.