டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி கத்தரிக்கோலால் குத்தி தற்கொலை செய்துகொண்டாா்.

வாசுதேவநல்லூா் அருகே சிந்தாமணிபேரிபுதூா் 1ஆம் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முனீஸ்வரன் (39). விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள தனியாா் ஆலையில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்த இவருக்கு, மனநோய் பாதிப்பு இருந்ததாம். அவா் கடந்த நவ. 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை (ஜன. 31) அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழைக் கொடுப்பதற்காக அவரது மனைவி கற்பகவல்லி வியாழக்கிழமை அதிகாலை வெளியூா் சென்றாராம். அப்போது, வீட்டிலிருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.