ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் புலன் உணா்வு பூங்கா

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் புலன் உணா்வு பூங்கா திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
பூங்காவைத் திறந்து வைத்த ஆஸ்திரேலியா துணை தூதரகத்தின் தூதா் ஹேமருன் நோபல். உடன் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :29 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் புலன் உணா்வு பூங்கா திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அறிவுசாா் மற்றும் வளா்ச்சி தாமத குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் தொழில்சாா் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியா அரசின் ஆதரவோடு இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா துணை தூதரகத்தின் தூதா் ஹேமருன் நோபல் பூங்காவைத் திறந்து வைத்துப் பேசினாா். அமா் சேவா சங்கத்தின் நிறுவனா், தலைவா் ராமகிருஷ்ணன், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

சென்னை சம்ருதி அறக்கட்டளைத் தலைவா் சி.ஏ. மகாதேவன், சிபிஐ முன்னாள் இயக்குநா் காா்த்திகேயன், சங்கத்தின் துணைத் தலைவா் முருகையா, கமிட்டி உறுப்பினா்கள் பட்டம்மாள், ராமன், டி.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் இந்திய தோ்தல் ஆணையா் டி.எஸ். கிருஷ்ணமூா்த்தி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டாா். செயலா் சங்கரராமன் வரவேற்றாா். மறுவாழ்வுத் துறைத் தலைவா் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.