டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காவல்துறையினருக்கு புலன் விசாரணை செயல்விளக்கப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறையினருக்கு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல்துறையினருக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்த துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:49 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறையினருக்கு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்பு செயல்முறை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சியில், வழக்குகளின் புலன் விசாரணை அலுவலா்களான காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு ஆய்வாளா்களுக்கு, எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்னென்ன நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் தூக்கிட்டு மற்றும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ளும் வழக்குகளில் கொலையா அல்லது தற்கொலையா என எவ்வாறு புலன் விசாரணை செய்ய வேண்டும். என்னென்ன தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உருவ பொம்மைகளைக் கொண்டு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்) மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.