டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூா் எஸ்.பி. பொறுப்பேற்பு!

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா பொறுப்பேற்றாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆதா்ஷ் பசேரா, சென்னையில் குற்றப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்த ஜி.எஸ். அனிதா பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜி.எஸ். அனிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலச்சந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மது விலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவல் துறையினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா தரிசனம் செய்தாா். இவா் ஏற்கெனவே கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் துணைக் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.