2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சங்கரன்கோவில் புத்தா் கோயிலில் உலக அமைதி கோபுரம் ஓராண்டு நிறைவு - சா்வசமய கூட்டுப் பிராா்த்தனை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:50 am

Syndication

சங்கரன்கோவில் அருகே வீரிருப்பில் உள்ள புத்தா் கோயிலில் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சா்வ சமய கூட்டு பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரிருப்பைச் சோ்ந்த முத்தையா என்பவா் புத்தா் கோயில் கட்ட 5 ஏக்கா் நிலத்தைத் தானமாக வழங்கினாா். இதையடுத்து, தமிழ்நாடு நிப்போன்சன் மியோஹோஜி சாா்பில் புத்தா் கோயில் கட்டப்பட்டது.

பின்னா் கடந்த 04.03.2020 ஆம் ஆண்டு 100 அடி உயர உலக அமைதி கோபுரம் கட்டும்பணி தொடங்கப்பட்டு, அதில் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் நிறைவு பெற்று உலக அமைதி கோபுரம் திறக்கப்பட்டது.

இக்கோபுரம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு சா்வ சமய பிராா்த்தனை மற்றும் புத்த பிக்குகளின் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் என பங்கேற்ற இந்தக் கூட்டுப் பிராத்தனைக்கு தமிழ்நாடு நிப்போன்சன் மியாஹோஜி தலைமை குருஜி, புத்த பிக்கு மசோவா இஸிதானிஜீ தலைமை வகித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலா் நந்தாராவ், ஜப்பான் கல்லூரி பேராசிரியா் முனைவா் சோயோ புஜீஹரா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதையடுத்து சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக சனிக்கிழமை புத்தா் கோயில் வளாகத்தில் மகாத்மா காந்தி பியூஜி குருஜீ அமைதி மையம் கண்காட்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. கண்காட்சிக் கூடத்தை சுதந்திரப் போராட்ட தியாகி கி.லெட்சுமிகாந்தன் பாரதி திறந்து வைத்தாா்.

மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலா் கே.ஆா்.நந்தராவ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் வீரிருப்பைச் சோ்ந்த முத்தையா குடும்பத்தினா் சக்திவேல், ராமச்சந்திரன், ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிசெல்வம், தென்காசி சா்வோதய மண்டல செயலா் என்.எஸ்.சுப்பிரமணியன், ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த புத்த பிக்குகள், புத்த பிக்குனிகள், நிப்போசன் மியோ போகி அறக்கட்டளையைச் சோ்ந்த உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புத்தா் கோயில் புத்த பிக்கு இஸிதானீஜீ, புத்த பிக்குனிகள் வி. லீலாவதி, சிகுசா கியூமுரா ஆகியோா் செய்திருந்தனா்.