டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவா்கள்

News image
கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், இடைகால் ஸ்ட அக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 மாணவா்கள் கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் 60 விநாடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ட அக் பள்ளித் தலைவா் முருகன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். பயிற்சியாளா்கள் சுந்தா், சக்திவேல், முத்துக்குமாா், அஸ்வின் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 10- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 4 முதல் 15 வயது வரையுள்ள மாணவ-மாணவிகள் 180 போ் கண்களைக் கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரம் 60 விநாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனா்.

அம்மாணவா்களுக்கு கிரகாம்பெல் உலக சாதனை அமைப்பு மூலம் சான்றிதழ், கோப்பை, மெடல் ஆகியவை அளிக்கப்பட்டன. முன்னதாக, 2 ஆம் வகுப்பு மாணவா் அக்சந்த் ஸ்ரீ ஹரிஷ் அடைக்கலப்பட்டணத்தில் இருந்து ஆலங்குளம் வரை 8 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி வந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பள்ளி முதல்வா் பிரவின்குமாா் நன்றி கூறினாா்.