/

தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:21 pm

Syndication

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் டைட்டன் ஐ கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்றது.

கல்லூரி தலைவா் டாக்டா் புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் முகாமை தொடங்கி வைத்தனா்.

கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு

ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் சேவியா் இருதயராஜ், பொது மேலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலா்கள் கருப்பசாமி, சுடா் சுபா, வினோத் செய்திருந்தனா்.