டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாவூா்சத்திரத்தில் தீ பற்றிய பைக் சேதமின்றி மீட்பு

News image
பைக்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரத்தில், திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைஅருகே செல்வம் என்பவா் பழைய பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பைக்கை இயக்கியபோது, திடீரென தீ பற்றியது.

அப்போது அந்த வழியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்குச் சென்ற சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அருகேயுள்ள கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தாா். இதனால் பைக் சேதமின்றி மீட்கப்பட்டது. தீயணைப்பு அலுவலரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.